Monday, 29th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: உலகம் முழுவதிலும் வாழும், அனைத்து மக்களையும், அச்சுறுத்தி கொண்டிருக்கும், "கொரோனா" தொற்று குறித்த விழிப்புணர்வை, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்திவதற்காக, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில், சுகாதாரம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், திருநெல்வேலியில், பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட, வண்ணார் பேட்டையில், இந்த கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள, "செல்ல பாண்டியன் மேம்பாலம்" அருகில் நடைபெற்ற, இந்த கலைநிகழ்ச்சியில், கிராமியக்கலைஞர்கள் பங்கேற்று, இசையுடன் கூடிய ஆடல், பாடல்கள் மூலம், சுகாதாரம் மற்றும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை, சுவைபட, மக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர். *அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!
பொது இடங்களில், சமூக இடைவெளியை, கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும்! * கைகளை, அவ்வப்போது முறையாக, கழுவ வேண்டும் ஆகிய குறிக்கோள்களை, மையமாக வைத்து நடத்தப்படும், இந்த கலைநிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.